இலங்கைசெய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மானிப்பாய் பொதுச் சந்தையில் இன்று (20) டெங்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது.

டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வு வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, சிறப்பு அதிதிகளாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன், யாழ். பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மு.சுலோச்சனா, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிந்துஷா, வலி. தென்மேற்கு சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button