இலங்கைசெய்திகள்

மலேரியா நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டார்!!

Malaria

மலேரியா நோயாளி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடமராட்சி, தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டிலிருந்து திரும்பி வந்த நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகிய இவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button