இலங்கைசெய்திகள்

அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது மிகப் பெரும் தவறு – மஹிந்த சுட்டிக்காட்டு!!

mahinda

அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதனால்இ அரசில் இருந்து வெளியேறி அரசை விமர்சிப்பதற்குக் கதவுகள் திறந்தே இருக்கின்றன எனவும் அவர் கூறினார்.

கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதிஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால்இ நேற்று மாலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசில் இருந்துக்கொண்டு அரசை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதைப் போன்றது.

அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.

எனினும்இ எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button