இலங்கைசெய்திகள்

மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவமும் ஒழுக்கக்கோவை வெளியீடும்!!

Logo Ceremony

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டி கௌரவிக்கும் வைபவம் இன்று(24) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கொழும்பு தெஹிவளை மாநாகர சபை உறுப்பினர் திருமதி சரீனா முஸ்தபா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன்இ காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ரமீஸ் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் ஆசிரியர்கள்இ பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டப்பட்டதுடன் சத்தியப் பிரமானமும் செய்து கொண்டனர் இதில் ஒழுக்க கோவையொன்றும் வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டன.

இதன் போது கொழும்பு தெஹிவளை மாநாகர சபை உறுப்பினர் திருமதி சரீனா முஸ்தபாவுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button