செய்திகள்மண்வாசனை

கல்வயலில் வாசிகசாலை மேம்பாடும் தைப்பொங்கலும் – நல்லதோர் முன்மாதிரி!!

Library

கல்வயல் மக்களின் சகல நன்மைகளுக்காகவும் சிறப்பாக இயங்கிவரும் கல்வயல் சமூக சேவா சங்கத்தின் தைப்பொங்கல் நிகழ்வு இன்று 15.1.2023 ஞாயிற்றுக்கிழமை 3.00 மணிக்கு வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளது.
அதைத்தொடர்ந்து பதியப்பட்ட அங்கத்தவர்களின் பாடசாலையில் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு (ஒரு அங்கத்தவருக்கு ஒரு பிள்ளைக்கு) கொப்பிகள் வழங்கிவைக்கும் ஆரம்ப நிகழ்வும்,
கல்வயல் டேனியா பாலர்பாடசாலைசிறார்களுக்கான வயலூரானின் பாலர்பைந்தமிழ் புத்தகங்கள் வழங்கப்படுவதோடு.
சமூகசேவாசங்கத்தின் கீழ் இயங்கும் கலைமகள் வாசிகசாலைக்கான கதைப்புத்தகங்கள் மற்றும் அன்பளிப்புகள் பல அன்பர்களால் வழங்கப்படவுள்ளது

விரும்புபவர்கள் புத்தகங்கள் கொடுத்துதவலாம் எனவும்
மேலும் வாசிகசாலையின் தொடர்ச்சியான செயற்பாட்டினை கருத்திற்கொண்டு நிரந்தரவங்கி வைப்பிலிடும் திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கொடை வள்ளல்கள் அதற்குரிய பங்களிப்புகளையும் செய்யலாம் எனவும்
இன்னும் சில நாட்களில் வாசிகசாலையில் அங்கத்தவர்கள் புத்தகங்களை பெற்று வாசித்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இன்னும் அங்கத்தவராக சேராதவர்கள் உடன் சேருமாறு வாசிகசலை சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புகளுக்கு.


தலைவர். 94778907580
செயலாளர் 94779590933
பொருலாளர் 94775024440

திட்ட இணைப்பாளர் 0774157245

Related Articles

Leave a Reply

Back to top button