இலங்கைசெய்திகள்

கீரிமலை காணி சுவீகரிப்பு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!!

Land Acquisition

கீரிமலை காணி சுவீகரிப்பு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

வலி.வடக்கு பிரதேசபைக்குட்டபட்ட கீரிமலை, காங்கேசன் துறை பகுதிகளில் மக்களின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

கீரிமலை J/266, காங்கேசன் துறை மேற்கு J/233 பகுதிகளில் 21 காணி உரிமையாளர்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணி நில அளவைத்திணக்களத்தினால் அளவிடும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ் காணி சுவீகரிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் மகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சதீபன், கலையமுதன், யாழ்.மாநகரசபை உறுப்பினர் ரஜீவ்காந்தி மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button