இலங்கைசெய்திகள்

நடை பவனியாக ஒருவர் காலிமுகத்திடலிற்கு பயணம்!!

Kottakala

தலவாக்கலை நகரிலிருந்து சசிகுமார் என்ற தனிநபர் ஒருவர் நடை பவனியாக காலிமுகத்திடலுக்குச் செல்லவுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இந்த தனிமனித நடைபவனி போராட்டம் இன்னும் மூன்று தினங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தில் இணையும் என்ற நோக்குடன் அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்கத் தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார். ஊர் மக்களின் ஆசியுடன் இவரது பயணம் ஆரம்பித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button