![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Knife-Attac.jpg?resize=708%2C398&ssl=1)
பாடசாலை மாணவி ஒருவருடனான காதல் விவகாரம் காரணமாக மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கிடையில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கத்திக்குத்துக்கு இலக்காகிய இரண்டு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கத்தியால் குத்தப் போவதாக கூறிய பாடசாலை மாணவனும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.