இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் மண் அகழ்வு மேற்க்கொள்ளப்படும் பகுதியில் இராணுவ காவலரண் அமைக்க முடிவு

கிளிநொச்சி இரணமைடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுக்கையில் மண்அகழ்வைத் தடுக்கும் வகையில் இராணுவ காவலரண் அமைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் அகழ்வு இடம்பெறும் பிரதேசங்களை நேற்றைய (19) தினம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவப் பணிப்பாளர், கரைச்சிப் பிரதேச செயலர் இராணுவ உயராதிகாரிகள் மற்றும் பொலிஸார் எனப்பலர் கள விஜயம் மேற்கொண்டு மண் அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி ஆராய்ந்தனர்.

இவ்களவிஜயத்தின் அடிப்படையிலேயே மண்அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதியில் இராணுவ காவலரண் அமைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button