இலங்கைசெய்திகள்

தட்டுப்பாட்டில் மண்ணெண்ணெய் அடுப்பு!!

Kerosene stove

சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

சமையல் எரிவாயு தொடர்பில் தற்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பினை கொள்வனவு செய்தமையினால் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலையானது தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், புறக்கோட்டை மற்றும் புறநகர்பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமையினால் நுகர்வோரும், வர்த்தக நிலைய உரிமையாளர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button