இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

Judge Manikkavaskar Ilancheliyan

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இன்றையதினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

அதேவேளை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள்இ சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button