இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் அடக்குமுறை நியாயமற்றது – ஜோசப் ஸ்டாலின் கண்டனம்!!

Joseph Stalin

இன்று (23) முகத்துவாரம் காவல்நிலையத்துக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டார்.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூட்டம் நடத்தியமை மற்றும் அதன்போதான உரை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் முகத்துவாரம் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அமைதியாகப் போராடியதைத்தவிர எவ்விதமான பயங்கரவாதச் செயலையும் புரியவில்லை. அவ்வாறானவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து தடுத்துவைப்பது, ஜனநாயக விரோதச் செயல் எனக்குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button