இலங்கைசெய்திகள்

யோஹானிக்கு காணி – அமைச்சரவை அங்கீகாரம்!!

jokaani di silva

பிரபல பாடகி யோஹானி டி சில்வாவிற்கு கொழும்பை அண்மித்த பகுதியில் காணியொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்ல – ரொபட் குணவர்தன மாவத்தையிலுள்ள 9.68 ஏக்கர் காணியொன்றையே வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பை அதிகரிக்க செய்தமையை கௌரவிக்கும் வகையிலேயே, இந்த காணி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

புத்தசாசனம், சமய விவகாரம் மற்றும் கலாசார விவகார அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1996ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு, அருகாமையிலேயே, யோஹானிக்கும் காணி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button