இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பேரணி!!

Jaffna university

  தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி  யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை சந்தித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது அவர்கள் தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான ஆதரவு கோரிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button