இலங்கைசெய்திகள்

இரு கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!!

Jaffna Prison

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தங்கள் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி, குறித்த கைதிகள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்களை பரிசீலித்து, மனிதப் படுகொலைக்கு காரணமாக அமைந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button