இலங்கைசெய்திகள்

நீச்சல் விளையாட்டுத் திடல் இன்னும் 2 மாதங்களுக்குள் செயற்படுநிலையில்  – அமைச்சர் டக்ளஸ் உறுதி!!

Jaffna central college

யாழ். மத்திய கல்லூரியின் இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலையில் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் திரு. சி. இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண கலவிப்பணிப்பாளர் ஜோன் குயின்ஸ்ரன் மற்றும் , யாழ்.வலயக் கலவிப்பணிப்பாளர் முத்து இராதா கிருஷ்ணன் ஆகியோரும் பஙகுபற்றிச் சிறப்பித்தனர்.

கௌரவ அமைச்சர் உரையாற்றும் போது, மத்திய கல்லூரியில், அமைக்கப்பட்டு நீண்ட காலமான நிலையில் சில தொழிநுட்பக் குறைபாடுகளால் செயற் படாமல் இருந்த நீச்சல் தடாகத்தினை விரைவில் மாணவர்களின் செயற்பாட்டிற்கு ஏற்றவாறு அமைத்துத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதற்கான வேண்டுகோள் ஏற்கனவே கோரப்பட்டிருந்த நிலையில் இன்று பாடசாலைச் சமூகத்தினரின் முன்னிலையில் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button