![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-15-at-10.47.39-2.jpeg?resize=708%2C531&ssl=1)
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 14.12.2021 நேற்று இடம்பெற்ற இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் வடமாகாணத்தின் சிறந்த அணியாக யாழ். மத்திய கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணி தெரிவாகியுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற போட்களில் வெளிக்காட்டிய திறமைகளின் அடிப்படைலேயே இத்தெரிவு இடம்பெற்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-15-at-10.47.40-1.jpeg?resize=708%2C944&ssl=1)
வழமையாக வெற்றியை சுவீகரிக்கும் சென்ஜோன்ஸ் அணி இம்முறை இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
இத்தகைய பெருமையைத் தேடித்தந்துள்ள கிரிக்கெட் அணியின் பொறுப்பாசிரியர்
தர்சன் அணியின் பயிற்றுவிப்பாளர் செல்ற்றன் மற்றும் அணித்தலைவர் இந்துஜன் ஆகியோருடன் அணியின் வீரர்கள் அனைவரையும் பாடசாலைச் சமூகமும் வடமாகாண விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டு. சென். மைக்கல் கல்லூரியும் மேல்மாகாணத்தில் கொழும்பு. றோயல் கல்லூரியும் தெரிவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-15-at-10.47.39-1.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-15-at-10.47.39.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-15-at-10.47.40.jpeg?resize=708%2C944&ssl=1)