இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் 60 கிலோ கஞ்சா மீட்பு!!

jaffna

இன்று(4) காலை யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற் கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் படகொன்று வருவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவத்தினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இளவாலை காவல்துறையினரிடம் கைப்பற்றப்பட்ட 60 கிலோகிராம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button