இலங்கைசெய்திகள்

பட்டம் விட்டு யாழில் கவனயீர்ப்பு!!

jaffna

யாழ்ப்பாணம் அரியாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திடம் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி இவ்வாறு பட்டம் விட்டு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான இன்று (19) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சட்ட தரணி அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றியும் மக்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button