இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழில் காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு!!

Jaffna

பதின்மூன்று வயதுச் சிறுமி ஒருவர் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக புகார் வழங்கப்பட்டிருந்தது. குறித்த சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸார் நடத்திய விசாரணைகள் அடிப்படையில் குறித்த சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை, திருமணமான நபர் ஒருவர் கண்டிக்கு அழைத்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    

Related Articles

Leave a Reply

Back to top button