![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-26-at-9.13.20-PM.jpeg?resize=708%2C890&ssl=1)
யோகர் சுவாமிகளின் 150வது ஜனன தின பூசை வழிபாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை { 29. 05.2022} காலை 8.00 மணிக்கு கொழும்புத்துறையில் உள்ள சமாதிக் கோயிலில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சுவாமி அவர்களுடனான அனுபவப் பகிர்வு குறித்த நூல் வெளியீடு ஒன்றும் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொண்டு ஆசி பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.