இலங்கைசெய்திகள்

வெங்காயச் செய்கை பாதிப்பினால் நட்டஈடு கோரும் விவசாயிகள்!!

jaffna

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியிலுள்ள வெங்காயச் செய்கையாளர்களின் பயிர்ச்செய்கையானது தற்போதைய சீரற்ற காலநிலையாலும், உரம் மற்றும் மருந்தின்மையாலும் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏக்கர் கணக்கிலாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி வெங்காயச் செய்கையாளர்களின் விவசாய முன்னெடுப்புகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. மேலதிக பராமரிப்பின்றி பயிர்ச்செய்கை கைவிடப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலை ஒருபோதும் ஏற்படாத ஒன்றென தெரிவித்த அவர்கள் நட்டஈட்டினையும் கோருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button