Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்!!

Jaffna

 முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில்  போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்,  இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறித்த  மனித சங்கிலிப் போராட்டமானது யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னாள் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button