இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு 90 நாட்கள் விசாரணை!!

Investigation

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னதாக கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறான ஒரு சம்பவம் இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று அவர் ட்வீட் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button