![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_pec-3-1.png?resize=708%2C392&ssl=1)
மட்டக்களப்பு ஆரையம்பதியில் சர்வமத தைப்பொங்கல் விழா ஆரையம்பதி சிகரம் புகலிடம் மண்டபத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மண்முனைப் பற்று ஆரையம்பதி சர்வமத அமைப்பினரால் சர்வமத தைப்பொங்கல் தைப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை(14) இடம் பெற்றது.
ஆரையம்பதி சர்வமத அமைப்பின் தலைவர் வி.தவராசா தலைமையில் நடைபெற்ற இத் தைப் பொங்கல் விழாவில் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவறீ சிவபாலன் குருக்கள், ஆலோசகர் எகெட் கரிட்டாஸ் இயக்குனர் ஏ.இயேசுதாசன் அடிகலார், பல்சமய ஒன்றியத்தின் உப தலைவர் மௌலவி எச்.எம்.ஸாஜஹான், இணைப்பாளர் ஏ.கிறிஸ்டி உட்பட மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் பிரதி நிதிகள், ஆரையம்பதி சர்வமத அமைப்பின் பிரதி நிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் புகலிடம் சிரியைகள், மாணவர்கள் பெற்றோர் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சர்வமத தைப்பொங்கல் இடம் பெற்றதுடன் புகலிடம் மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் சமதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பொருட்டு இவ்வாறான நிகழ்வுகளை மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் நடாத்தி வருகின்றது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_pec-5.png?resize=708%2C319&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_pec-6.png?resize=708%2C377&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_pec-9.png?resize=708%2C342&ssl=1)
செய்தியாளர் – சக்தி