இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க நிகழ்வு!!

Innovation event

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 09 நிகழ்வு மார்கழி மாதம் 5,6,7,8,9 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

05.12.2021 ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் பா.அ.ஜயகரன் நாடகநெறியாளர் நாடகஎழுத்தாளர் இயக்குநர் நாளை அரங்க பயிற்சிப்பட்டறை (கனடா)

“கனேடிய தமிழ் சீரிய நாடக தொடக்கமும் வளர்ச்சியும். தேடகத்தின் செயற்பாடும் எனது நாடக அனுபவங்களும்.” ,

06.12.2021 திங்கட்கிழமை நிகழ்வில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நாடகப்பணிகளும் கூத்துப் புத்தாக்கமும்

07.12..2021செவ்வாய்க்கிழமை நிகழ்வில் பிரளயன்

நாடகச்செயற்பாட்டாளர் , திரைப்பட இயக்குநர்

(தமிழ்நாடு இந்தியா )

தமிழ் சூழலில் “வீதிநாடகம்” வடிவ உள்ளடக்கமும் வளர்ச்சிப்போக்கும்,

08.12..2021 புதன்கிழமை நிகழ்வில்

தேசிய கல்வி நிறுவகம் அழகியற்துறை விரிவுரையாளர் கலாநிதி றாகினி திருக்குமரன் அரிதார அரம்பையர் (தேவரடியார் பற்றிய சமூகப் பார்வை) ,

9.12.2021 வியாழக்கிழமை நிகழ்வில் மாவை நித்தியானந்தன் நாடகச்செயற்பாட்டாளர் (அவுஸ்ரேலியா) சிறுவர் நாடகத் துறையும், எனது அனுபவங்களும்

ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளனர் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button