இந்தியாசெய்திகள்

இன்று இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம்!!

Indian Independence Day

இன்று இந்தியா தமது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

இன்று காலை தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக இன்று சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது உரையின் போது புதிய திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினத்தையொட்டி இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

புது டில்லியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button