இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!!

Indian External Affairs Minister S. Jaisankar

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாளை கொழும்பில் சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. இத் தகவலை உறுதிப்படுத்தினார். அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் பேசவுள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button