இந்தியாசெய்திகள்

இந்தியர்களை யுக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

india

யுக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியன நிராகரித்துவிட்டன.இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. யுக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.

யுக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, யுக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல நாடுகள் யுக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன.

இந்தநிலையில், யுக்ரைனில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

யுக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், தங்கள் நிலை மற்றும் இருப்பிடங்களை உக்ரைன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button