![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/2f840e79158f29aa852e19c0ddb11332.jpg?resize=708%2C394&ssl=1)
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால். இன்று இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.