இலங்கைசெய்திகள்

இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வருகை!!

India

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு நாளை இலங்கை வரவுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

விசேட விமானம் மூலம் நாளை இலங்கைக்கு வரவுள்ள இந்தக் குழுவினர், மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் இவர்கள் மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்வதற்காக இங்குள்ள நிலைமைகளை மதிப்பிடவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

இக்குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button