இந்தியாசெய்திகள்

உத்திரப்பிரதேசத்தில் மதக்குழுக்களிடையே மோதல்!!

India

உத்திரப்பிரதேசம் – கான்பூரில் இரு மதக்குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பெண் ஊடகப்பேச்சாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டதை அடுத்து இந்த வன்முறை ஆரம்பமானது.

வன்முறை பதிவான இடத்தில் தற்போது அமைதி நிலவுவதாகவும் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் கான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button