இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிகரித்துவரும் ஐஸ் போதைப்பாவனை – மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனை!!

Ice addiction

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஸ் போதைப்பொருள் பாவனை கிரமமாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலியில் நேற்று (14) இடம்பெற்ற வைபவம் ஒன்றில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையை பிரபலப்படுத்த சிலர் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button