இலங்கைசெய்திகள்

பிரதமர் ரணில், ஹிருணிகா குறித்து வெளியிட்டுள்ள கருத்து!!

Hirunika

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர்,  தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான அவரது புகைப்படங்களை பகிர்வது சரியில்லை எனவும், அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Back to top button