செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!

Help

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சகோதரனான திரு. அன்ரன் அவர்கள், தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

தற்போதைய நாட்டுச் சூழலானது மக்களை அதிகமாகப் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.

அதிகரித்த உணவுப்பொருட்களின் விலை, மின்கட்டண அதிகரிப்பு போன்றவை அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தான், எமது மக்களைத் தாங்கும் பலமாக உள்ளது.

திரு. அன்ரன் அவர்களின் காலமறிந்து செய்யப்பட்ட இந்த உதவியினைச் சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளார்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button