செய்திகள்புலச்செய்திகள்

செல்வன் மகிசனின் அகவை தினத்தை முன்னிட்டு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!!

help

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் KB Vakees sumithira தம்பதிகளின் செல்வப்புதல்வன் மகிசன் அவர்களது பத்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெற்றோர் குறித்த சில குடும்பங்களைத் தெரிவு செய்து உலருணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.

அதிகரித்துள்ள பொருட்களின் விலை ஏற்றத்தாலும் மழையினாலும் பாதிக்கப்பட்டு தொழிலின்றி வறுமை நிலையில் இருக்கும் இனம் காணப்பட்ட சில குடும்பங்களிற்கே இவ் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எங்கள் உறவுகளின் வாழ்தல் என்பது, இவ்வாறான ஈரமனம் கொண்ட புலம்பெயர் உறவுகளின் ஈகையினாலேயே செழிக்கின்றது. உதவி பெற்றவர்கள் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந் நற்செயலை பல சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button