![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-08-at-6.31.09-PM-768x1024.jpeg?resize=708%2C944&ssl=1)
இறுதி யுத்தத்தில் பல இன்னல்களைச் சந்தித்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் வாழும் முன்னாள் போராளி ஒருவருக்கு, அவரது வாழ்வாதாரத்தினை சீர் செய்யும் பொருட்டு கிளிநொச்சியிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியா சிட்னியில் வசிக்கும் புலம்பெயர் உறவான ரவி என்பவர், பசுமாடும் கன்றும் வழங்கி வைத்துள்ளார். இந்த உதவியினை சிட்னியில் வசிக்கும் துஷி என்பவரே ஒழுங்கமைத்துக் கொடுத்திருந்தார்.
அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்ற, இவர்களைப் போன்றோருக்கு தற்போதைய சூழலில் இந்த உதவிகள் மிக அவசியமாகின்றன. அவரது உதவியினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். அத்துடன் உதவி பெற்ற குடும்பத்தினரும் இருவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்திருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-08-at-6.31.09-PM-1-768x1024.jpeg?resize=708%2C944&ssl=1)