செய்திகள்புலச்செய்திகள்

வாழ்வாதார சுயதொழில் உதவி வழங்கும் செயற்றிட்டம்!!

help

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் அன்ரன் என்பவர் மிகுந்த வறுமையில் வசிக்கும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிப்படைந்துள்ள குடும்பங்கள் என ஐந்து குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களின் சுயதொழில் வாய்ப்பிற்கு பெருந்தொகையான நிதி உதவியினை வழங்கியுள்ளார்.

தற்போதைய காலத்தில் பலரும் வறுமையான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் பட்டினியும் பரிதாபமும் தலைதூக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

‘காலத்தினால் செய்யும் உதவி ஞாலத்தில் பெரிதென்பர்’. தேவையான காலத்தினை அறிந்து இவர் செய்த இந்த உதவியானது பலராலும் பாராட்டப்படுகின்றது.
ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, துவிச்சக்கரவண்டி வழங்கல், சுயதொழில் உபகரணம் வழங்கல் என இவருடைய உதவிகள் பலதரப்பட்டவையாக அமைந்துள்ளன.

உதவிகளைப் பெற்றவர்கள் தமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button