செய்திகள்புலச்செய்திகள்

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!!

help

அவுஸ்ரேலியா சிட்னியை சேர்ந்த புலம்பெயர் சகோதரர் ஒருவர் தனது சொந்த நிதிப்பங்களிப்பில் வன்னிப் பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.

வயதான தாயாரோடு வசித்துவரும் பெண் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பாக கோழி குஞ்சுகளும் தீவனமும் வழங்கி வைத்துள்ளதோடு. தாய்,தந்தை இன்றி தனித்து வசித்து வரும் சகோதரி ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பாக தையல் மெசின் ஒன்றினையும் வழங்கி வைத்துள்ளார்

தமது இளமைக்கால வாழ்வை அர்ப்பணித்துவிட்டு சகோதரர்களையும் தியாகம் செய்துவிட்டு இருவருமே மிக வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி அதிகளவில் உள்ள தற்போதைய சூழலில் இத்தகைய உதவிகள் மிகத்தேவையான ஒன்றாகும். அன்றாட வாழ்வை பசியின்றி நகர்த்த இந்த உதவிகள் கரம் கொடுக்கின்றன. உதவி பெற்றவர்கள் தமது நன்றிகளைக் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தன்னை அடையாளம் காட்டாது இந்த உதவியினை வழங்கி வைத்த சகோதரரிற்கு எமது ஐவின்ஸ் இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button