செய்திகள்புலச்செய்திகள்

சமூக மேம்பாட்டு அணியினரின் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!!

help

இன்றையதினம் { 23.04.2022} சமூக மேம்பாட்டு அணியினரால் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பத்திற்கு கோழிக்கூடு ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றொரு குடும்பத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்கான முதற்கட்ட உதவியாக 300 அரி கற்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

திரு. ஜெ. டினேஸ் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அத்தியடியை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. சபாநாதன் அவர்களினூடாக கனடா வாழ் திரு. சுரேன் அவர்கள் இந்த இரு உதவிகளுக்குமான நிதிப்பங்களிப்பினை வழங்கிவைத்துள்ளார். மேற்படி உதவியை நகர சபை உறுப்பினர் திரு.ம. நடனதேவன் அவர்கள் உரியவர்களிடம் வழங்கி வைத்துள்ளார்.

வறுமை அதிகமாகத் தலைதூக்கியுள்ள இந்நாட்களில் இத்தகு ஒன்றுபட்ட உதவிகள் பாராட்டத்தக்கவை. ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button