இலங்கைசெய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியல் மிக மோசமான பாதிப்பினை அடைந்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் உறவுகள் சிலர் ஒண்றிணைந்து உதவித்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யுத்த காலத்தில் மக்களோடு நின்று மக்களிற்காக பணியாற்றி தற்போது புலம்பெயர் தேசம் சென்றுவிட்டபோதும் மக்களிற்காக
தமது உதவிகளை செய்ய வேண்டும் என்றெண்ணி ஐந்து நண்பர்களாக இணைந்து யுத்தத்துக்குள் வாழ்ந்து
இன்று வரை மிகவும் கஸ்ரங்களோடு வாழ்த்து கொண்டிருக்கும் இனம் காணப்பட்ட குறிப்பிட்டளவான குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களையும் சிறுதொகைப் பணத்தினையும் வழங்கி வைத்துள்ளனர்.

உதவிகளைப் பெற்றவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இவர்களின் உதவும் மனப்பான்மையை சமூகஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நல்லுங்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கின்றோம்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button