இலங்கைசெய்திகள்

புதிய தாழமுக்கம் – வடக்கில் கன மழை சாத்தியம்!!

Heavy rain

வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாழமுக்க நிலைமை வடகிழக்குத் திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மிதமான மழைவீழ்ச்சி தொடரும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கன மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்தத் தாழமுக்கம் வழக்கத்துக்கு மாறாக வடகிழக்குத் திசை நோக்கி நகர்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பிற்பகுதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கன மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button