செய்திகள்தொழில்நுட்பம்

இலங்கையை ஆட்டிவைக்கும் சர்வதேச ஹக்கர்கள்!!

Hackers

இலங்கையை ஆட்டிவைக்கும் சர்வதேச ஹக்கர்கள்!!

ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு பல இடங்களில் கடுமையாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் குழு அரச இணையதளங்களை முடக்கி சைபர் தாக்குதல் நடாத்தியுள்ளது. மக்களின் போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்குவதாக கூறியே இந்த தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் இன்று மாலை அரச சார்பான பல தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் இந்த ஹக்கர் அணி அறிவிப்பு விடுத்துள்ளது.

ஈஸ்ரர் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் உண்மைகள் வெளியாகும் என அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் பூராகவுமுள்ள மக்கள் அந்த உண்மைகளை அறிவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். எந்த தாக்குதலை காரணம் காட்டி ராஜாக்ஷ குடும்பம் கதிரையேறியதோ அதே தாக்குதல் அவர்களின் பேரழிவிற்கும் காரணமாகலாம் என சமூக வலைத்தளததில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button