![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/1648514877344-1.jpg?resize=708%2C319&ssl=1)
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தார் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரன் அவர்கள்.
கடந்த திங்கட்கிழமை (28) அவரது அலுவலக அணியினருடன் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் எஸ்.பத்மசீலன் உட்பட மேற்படி நிகழ்வு இடம் பெற்றது. 189 புள்ளிகளைப் பெற்ற ஜயநேசன் பிரதீஷ்,186 புள்ளிகளைப் பெற்ற துஷ்யந்தன் ஜீவின்,185 புள்ளிகளைப் பெற்ற கஜசெல்வன் அஸ்வின் ஆகியோர் பாராட்டப் பட்டனர். இம்மூவரும் திருகோணமலை கோணேஷ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/1648514870248-1.jpg?resize=708%2C326&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/1648514877344-2.jpg?resize=708%2C319&ssl=1)
செய்தியாளர் – திருகோணமலை ஏ.ஜே.எம்.சாலி