இலங்கைசெய்திகள்

பணியிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்!!

Grama Niladharis

இந்த வருடத்திற்கான வாக்காளர் பட்டியல் திருத்த களப் பணிகளில் இருந்து விலகுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்க காரணம் என அதன் இணைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிராம உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே குறித்த பணிகளில் இருந்து விலக தமது அனைத்து தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன.

இதனால் இந்த வருடத்திற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும்.

குறித்த தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சுமித் கொடிகார குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button