![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/PMD-12.jpg?resize=708%2C399&ssl=1)
பொதுமக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதமேந்திய முப்படையினருக்கு அழைப்பு கட்டளையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார்.
இந்த கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றுக்கு இன்று (8) அறிவித்தார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.