இலங்கைசெய்திகள்

வவுனியாவில் காஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவம் பதிவு!!

Gas stove explosion

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.  
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (25) அதிகாலை நத்தார் பிரார்த்தனைக்காக தேவாலயம் செல்வதற்காக வீட்டுத்தலைவரால் நீர் கொதிக்க வைத்த பின்னர் அடுப்பினை நிறுத்தி விட்டு தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.
தேவாலயத்திற்கு சென்று விட்டு இன்று அதிகாலை 1.45 மணியளவில் வீட்டிற்கு வந்து சமையல் அறையை பார்த்த போது காஸ் அடுப்பு வெடித்திருப்பதை அவதானித்தமையை அடுத்து உடனடியாக காஸ் சிலின்டர் இணைப்பினை கழற்றி காஸ் சிலின்டரினை பாதுகாப்பாக வெளியில் எடுத்து சென்றுள்ளமையால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 05வது காஸ் அடுப்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button