![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/3924b3db-gajendrakumar-_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
சில தமிழ்க் கட்சிகள் இணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது, தமிழ் மக்களை ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சதியாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.