இலங்கைசெய்திகள்

சாதனை படைத்த வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையம்!!

Fuel

எரிபொருள் நெருக்கடிக்குள் தீர்வாக தேசிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தேசிய ரீதியில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முதலாமிடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிசக்தி அமைச்சு வரிசைப்படுத்திப் உள்ளது.

அதன்படி,

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜி.எச்.ஏ.டீ. சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் அனுராதபுரத்தில் உள்ள டபிள்யூ.எம்.டீ.கே.உயன்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையம் இரண்டாம் இடத்தையும் யாழ்ப்பாணம் கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள ஜெயபிரணவன் எரிபொருள் நிரப்பு நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button