இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான பயண ஆலோசனையில் தளர்வை ஏற்படுத்தியது பிரான்ஸ்!!

France

இலங்கைக்கான பயணத்தில் ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்றவாறு இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக ‘அத்தியாவசியப் பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.
தற்போது, குறித்த பரிந்துரையைத் தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சுற்றுலா பயணிகளின் சங்கம் (SLAITO), இலங்கை சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்கு இந்த தளர்வு மிகவும் அவசியமானது என்றும் இதனைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button